பலாலி தெற்கு வயாவிளான் சென்ஜேம்ஸ் தேவாலயம் புனரமைப்பு…

0
1257

கடந்த வருடம் 2015-03-23ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் அமைந்துள்ள வராலற்று புகழ்வாய்ந்த சென்ஜேம்ஸ் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள், ஊர்மக்கள், மற்றும் புலம்பெயர் வாழ் வயாவிளான் மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலயத்தின் புரமைப்பு பணிகளுக்கு 5மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 1.5மில்லியன் ரூபா செலவில் கூரை வேலைப்பாடுகள், “டோம்“அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் ஆலயத்தின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்து,கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு 5மில்லியன் ரூபா வழங்கவுள்ளது. இதற்கு முதற்கட்டமாக 1இலட்சத்து 15ஆயிரம் ரூபா ஆலய நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக தேவாலயத்தின் உருக்குலைந்த தேவாலய சொருபங்கள் மீண்டும் பிரதிஸ்ரை செய்யவும்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.